தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
பதவி உயர்வு:
ஐ.ஏ.எஸ்.அமுதாவுக்கு பிரதமர் அலுவலக இணை செயலாளராக மத்திய அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.இவர் 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பயிற்சி முடித்ததும் உத்ரகண்ட்டில் உள்ள லால்பகதுார் சாஸ்திரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
நேர்மையும், பொறுப்பும்:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்ததற்காக பலராலும் பாராட்டப்பெற்றவர்.
நேர்மையான அதிகாரியான அமுதா தனது சிவில் சர்வீஸ் பணியில் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகவும் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது சேவையை பிரதமர் அலுவலகத்தில் இணை செயலாளராக பணிபுரிய உள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு பெருமை படவைக்கப்படும் விஷயம் ஆகும்.