பொங்கலை ஒட்டி ஜனவரி 14 ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி வருகை
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்து வந்தாலும் வருடம் தோறும் வெகு விமரிசையாக இப்போட்டி நடைபெற்று வருகிறது. அதைப்போல இந்த வருடமும் ஜனவரி 14 ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடக்கபோட்டியாக ஆரம்பிக்கவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராகுல் காந்தி தமிழகம் வரும் அதே நாளில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா தமிழகம் வரவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
பெண்களிடம் ஆபாச பேட்டி – சென்னை பிரபல யூடியூபர்கள் போலீசாரால் அதிரடி கைது!!
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாட்டின் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகளுக்கு காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.