ராகுல் டிராவிட் இதுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார்…, பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!!

0
ராகுல் டிராவிட் இதுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார்..., பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!!
ராகுல் டிராவிட் இதுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவார்..., பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்!!

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய அணி டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

டேனிஷ் கனேரியா:

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறியதை அடுத்து, பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதில், குறிப்பாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை பதவி விலக வேண்டும் என்று கூறும் அளவுக்கு பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா இந்திய அணி குறித்து ராகுல் டிராவிட்டிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வருங்கால பிரதமர் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தானா?? இந்திய வீரர் பதிவால் குழப்பிய ரசிகர்கள்!!

அதில், ராகுல் டிராவிட் டி20 போன்ற குறுகிய வடிவ தொடர்களுக்கு பயிற்சி அளிப்பதை விட, டெஸ்ட் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி அணிக்கு பயிற்சி அளிக்கலாம் என்று கூறியுள்ளார். இது தான் இவருக்கு சிறந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், கே எல் ராகுல் பெரிய அணிகளுக்கு எதிராக சொதப்பி வருவதை அறிந்த டிராவிட், அடுத்த போட்டிகளில் டாப் ஆர்டரை ஏன் மாற்றி அமைக்க வில்லை என்று கேட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய களத்திற்கு 120 கி.மீ வேகத்தில் பந்து வீசுபவர்களை விட, எக்ஸ்பிரஸ் பந்து வீச்சாளர்களான, உம்ரான் மாலிக், முகமது சிராஜ் உள்ளிட்டவர்கள் தான் தேவை. இவர்களை ஏன் அணியில் தேர்வு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது போன்ற அணி தேர்விலேயே பயிற்சியாளராக டிராவிட் தவறு செய்துள்ளதாக டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here