சின்னத்திரை சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இப்போது பிரிந்து வாழ்கின்றனர். இதைத் தொடர்ந்து சமீபத்தில் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. நேற்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தேவையற்ற விஷயங்களை பரப்புவதை விட இதை பகிருங்கள் என பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லியுள்ளார். அதாவது ரச்சிதா இப்போது RM கிரியேஷன்ஸ் என்கிற பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். அதை இன்ஸ்டால் பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக “கனவுகளோடு இருக்கும் பட இயக்குனர்களின் கதையைக் கேட்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களது கனவுகளை நினைவாக்க நாங்கள் இருக்கிறோம். லட்சியத்தோடு படம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்களின் கதைகளையும் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என பதிவிட்டுள்ளார் தற்போது இவரின் பட தயாரிப்பு நிறுவனத் திறப்புக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.