பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட இரு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை இணையத்தில் பேசு பொருளாக உள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியளாக கலந்து கொண்ட நிக்சன், பிரதீப் மீது உரிமைகுரல் தூக்கிய குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், நாங்கள் எந்த இடத்திலுமே பிரதிபால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லவில்லை என்றும் அங்கே அத்தனை கேமரா இருக்கிறது ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செய்யும் செயல் தான் சரி இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தோம் என்றார். உள்ளே இருந்த பல போட்டியாளர்கள் பிரதீப்புக்கு எதிராக உரிமை குரல் தூக்கி விட்டு வெளியே வந்து பிரதீப் நல்லவர் என்று பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கமல் சார் முன்பு கூட பாத்ரூம் கதவை திறந்து வைத்து போனது குறித்து கேள்வி கேட்டபோது அவரிடமும் நான் அப்படிதான் அதனால் இங்கேயும் அப்படியே இருப்பேன் என்று பிரதீப் பேசியதாக கூறினார். அதனால்தான் கமல் சாருக்கும் கோபம் வந்திருக்கும் என்று தான் நினைப்பதாக கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!