முதல் நாளிலேயே புஷ்பா படத்திற்கு ஏற்பட்ட நிலை – பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்!!

0

ரசிகர்களால் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காததால் முதல் காட்சி பார்க்க முடியாமல் விரக்தியில் தியேட்டரில் ரகளை செய்து வருகின்றனர்.

பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்

சுகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட ”புஷ்பா” திரைப்படம் நேற்று திரையரங்கத்தில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே ரசிகர்களுக்கிடையே அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ”ஓ சொல்றியா” பாடல் மூலை முடுக்கு எங்கும் ஒலிக்கும் அளவிற்கு மிகவும் வைரலானது. இந்த திரைப்படத்திற்கான டீஸர், பிரஸ்ட் லுக் ஆகிய அனைத்திற்குமே ரசிகர்களுக்கிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. வனப் பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக கொண்டே இந்த திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தினை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக ஆர்வமாக இருந்தனர். பல பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் கொந்தளித்து வந்தனர். இந்த நிலையில் ஒரு தியேட்டரில் மக்களுக்கு டிக்கெட் வழங்காமல் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்ததால் ரசிகர்கள் ரகளை செய்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பேனர் அனைத்தும் கிழித்து கலவரத்தில் ஈடுபட்டனர். ரகளை செய்த வீடியோ இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது மற்றும் திரையரங்கத்தில் படத்தின் ஆடியோ சரியாக கேட்காத காரணத்தினால் ரசிகர்கள் தியேட்டர் திரையை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here