திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பிரபலமான சுற்றுலா தலம் தான் புளியஞ்சோலை. இந்த அருவியில் குளிப்பதற்கு எக்கசக்க சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர். மேலும் அங்கு மூலிகை செடிகள் அதிகம் இருப்பதாகவும்,சுவாசித்தால் போதும் நோய்கள் நொடியில் நீங்கும் என சொல்லப்படுகிறது. அதனாலயே இந்த இடத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் கொல்லி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புளியஞ்சோலை அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட அபாயம் இருக்கும் காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
EPFO நிறுவனம் மாஸ் அறிவிப்பு., ஊதிய வரம்பு ரூ.21,000ஆக உயர்வு? லட்சக்கணக்கான ஊழியர்கள் வரவேற்பு!!!