பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் குழந்தை பிறந்த பிறகு ஜெனி பாக்கியாவின் வீட்டுக்கு வந்துவிட்டார். இதன் காரணமாக செழியனால் மாலினியுடன் நேரம் செலவிட முடியவில்லை. இதனால் செழியனை சந்திக்க பாக்கியா வீட்டுக்கு மாலினி வருகிறார். மேலும் தன் வீட்டுக்கே மாலினி வந்திருப்பதை பார்த்த செழியன் ஷாக் அடைகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் வேலை சம்பந்தமாக தான் வந்துள்ளேன் என காரணம் கூறுகிறார். ஆனால் மாலினியை பார்த்த செழியனின் முகம் மாறுவதை பாக்கியா கவனித்து விடுகிறார். இதை வைத்து பார்க்கும்போது இனி வரும் எபிசோடில் செழியனின் திருட்டு வேலை பாக்கியாவுக்கு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செழியன் மற்றும் மாலினி இருவரும் சேர்ந்து கையும் களவுமாக பாக்கியாவிடம் மாட்டி கொள்கின்றனர். அப்போது பாக்கியா ச்சீ., நீ எல்லாம் ஆம்பளையா என செழியனை பார்த்து கேட்டு, மாலினி கன்னத்தில் பளார் பளார் என அறை விடுவாராம்.