இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல்:
இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் மத்திய மாநில அரசுகளின் வரி தாக்கத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் பெட்ரோல் விலையில் சதம் கடந்து புதிய உச்சத்தை அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது இதனை குறைக்கும் வகையில் இந்தியாவில் சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த வரிசையில் புதுச்சேரியும் இணைந்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை 2 சதவீதம் குறைத்துள்ளனர். இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார். மேலும் இதன் மூலம் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.40 குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த வரிக்குறைப்பு மூலம் மக்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.71 கோடி அளவுக்கு பயன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு – போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு!!
தற்போது புதுச்சேரியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.55 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.86.08 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போல் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.