அடுத்த 5 ஆண்டுகளில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரிக்கும் என்று பிரபல நைட் பிராங் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெரும் பணக்காரர்கள்:
கொரோனா காலத்திற்கு பின்பு இந்தியாவின் பொருளாதாரம் அபார வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் இந்தியாவில் அதிக அளவு தொழில் முதலீடும் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் நைட் பிராங் இந்தியா நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் கூறியதாவது, நாட்டில் 219 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என தெரிவித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 63 சதவீத அளவில் உயரும் என்றும் தெரிவித்தனர். அதாவது, 11 ஆயிரத்து 198 வரை உயரும் என்று தெரிவித்துள்ளனர். தற்போது உலக அளவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 5.22 லட்சமாக இருக்கிறது. அதில் இந்தியா பணக்காரர்களின் எண்ணிக்கை 6,884 பேர் உள்ளனர்.
1600 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை – இன்றைய நிலவரம்!!
தற்போது இந்தியாவின் பொருளாதார செயல்பாடுகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. எனவே வரும் காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாயாக நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிக அளவில் தொழில்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.