தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு – போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு!!

0

தமிழகத்தில் போக்குவரத்துக்கு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் போக்குவரத்து கழகங்கள் தற்போது தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை தேர்வு செய்யும் பணிகளை துவக்கியுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள்:

தமிழகத்தில் நேற்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நேற்று மற்றும் இன்று பேருந்து இயங்காத காரணத்தினால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து ஊழியர்களும் போராட்டத்தை கைவிடிவிடுவது போல் தெரியவில்லை. தற்போது இந்த நிலையை சரிசெய்வதற்கு போக்குவரத்து கழகங்கள் ஓர் முடிவை எடுத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் பணிக்கு வரக்கூடிய ஊழியர்களை அச்சம் அடைய செய்து பணிக்கு வராமல் தடுப்பதற்கும் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சாலைப்பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்த டிரைவர்களின் பட்டியலை தற்போது சேகரித்துள்ளனர்.

தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் – இன்று மாலை அட்டவணை வெளியீடு!!

மேலும் வட்டார அலுவலகங்களில் பயிற்சி பெற்ற டிரைவர்கள் பெயர் பட்டியலையும் சேகரித்துள்ளனர். தற்போது அவர்களை அழைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் பல மாவட்டங்களில் தற்போது இந்த பணி நடைபெற்று வருகிறது. மேலும் இன்று முதல் சில தற்காலிக ஊழியர்கள் பேருந்தை இயக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here