‘மானநஷ்ட வழக்கு தொடருவேன்’ – தயாரிப்பாளருக்கு நடிகர் விமல் எச்சரிக்கை!!

0

நடிகர் விமல் 50 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக கூறி தயாரிப்பாளர் ஒருவர் விமல் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாருக்கு எதிராக மானநஷ்ட வழக்கு தொடருவேன் என தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விமல்.

நடிகர் விமல் மீது வழக்கு

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் விமல். நடிகர் விஜய் போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு நண்பனாக நடித்து வந்த நடிகர் விமல் ‘பசங்க’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானர். தொடர்ந்து களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் இவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அரசியல் மீது ஆர்வம் உள்ள நடிகர் விமல், சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து தேர்தலுக்கான விருப்ப மனுவை கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் விமல் மோசடி சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் நடிகர் விமலிடம் 50 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளதாகவும், அதை திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இது குறித்து கேள்விப்பட்ட நடிகர் விமல், தற்போது தனது தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் அதிரடி!!

நடிகர் விமல் தெரிவிக்கையில், ‘என்னைப்பற்றி தவறான தகவல்கள் ஊடகங்களிலும் சமூகவலைதளங்களிலும் பரவி வருவது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கிறது. என்னைப்பிடிக்காத யாரோ ஒருவர் இத்தகைய தகவல்களை பரப்பி வருகிறார். யாரோ ஒருவரின் தூண்டுதலினால் தான் திருநாவுக்கரசு இவ்வாறு புகார் அளித்துள்ளார். அவரிடம் நேரடியான பணம் கொடுக்கலோ, வாங்கலோ இல்லை’ என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக நடிகர் விமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here