பிக் பாஸ் நடிகையிடம் அத்துமீறிய பிரபல கட்சி பொதுச் செயலாளரின் உதவியாளர்! போலீஸ் வழக்கு பதிவு!!

0
பிக் பாஸ் நடிகையிடம் அத்துமீறிய பிரபல கட்சி பொதுச் செயலாளரின் உதவியாளர்! போலீஸ் வழக்கு பதிவு!!
பிக் பாஸ் நடிகையிடம் அத்துமீறிய பிரபல கட்சி பொதுச் செயலாளரின் உதவியாளர்! போலீஸ் வழக்கு பதிவு!!

பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா கவுதம் தந்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா-வின் தனி உதவியாளர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் அர்ச்சனா கவுதம்

தனியார் தொலைக்காட்சிகளில் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பல ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகின்றனர். அதில் மக்களுக்கு தற்போது வரை பேவரைட்டாக இருப்பது பிக்பாஸ் ஷோ தான். அப்பேற்பட்ட பிக்பாஸ் ஷோவின் மூலம் world முழுவதும் ரீச்சானவர் தான் அர்ச்சனா கவுதம். இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடனே உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை தொடர்ந்து கடந்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் ராய்ப்பூரில் காங்கிரஸ் சார்பாக பிரம்மாண்ட மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் பிரதிநிதிகள் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில், அர்ச்சனா கவுதமும் கலந்து கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவை நேரில் பார்த்து பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி வத்ரா வின் உதவியாளரான சந்தீப் சிங்கிடம் கேட்டுள்ளனர்.

காசு கையில் இருந்தால் தான் நிஜம்.. அதற்கு முன்னாடி கனவு காணாதீர்கள்.. ரசிகர்களுக்கு செல்வராகவன் அறிவுரை!!

அதற்கு அவரோ, அர்ச்சனாவை பார்க்க விட மறுத்ததாகவும், ஜாதியை குறித்து ஆபாச பேச்சுக்களை பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டலும் விட்டதாக காவல்துறையிடம் அர்ச்சனா தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here