அரசு ஊழியர்களுக்கு, இதுவரை வழங்கப்படாமல் உள்ள நிலுவை தொகை ரூபாய் 3000 கோடியை, மார்ச் 31 -க்குள் வழங்க முடிவெடுத்துள்ளதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு :
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் போராடி வரும் நிலையில், சமீபத்தில் இது சார்ந்த சூப்பர் அறிவிப்பை ஆந்திரா அரசு வெளியிட்டது. அதாவது, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை துணை குழு பரிந்துரையின் அடிப்படையில், ஊழியர்களுக்கு இதுவரை நிலுவையில் உள்ள மொத்த ரூ. 3000 கோடி தொகையை வருகிற மார்ச் 31 க்குள் வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழக மக்களே உஷார்., மின் கட்டணம் குறித்து இணையத்தில் உலா வரும் வதந்தி! அமைச்சர் அதிரடி விளக்கம்!!
இதன் மூலம் ஊழியர்களுக்கான GPF தொகை, ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் மருத்துவ நிலுவைத் தொகை சார்ந்த அனைத்து பணமும் ஊழியர்கள் கைக்கு சென்று சேர உள்ளது. இதனால் இம்மாத இறுதிக்குள் ஆந்திரா அரசு ஊழியர்களின் பெரிய அளவிலான தொகை, சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.