சமீப காலமாக திருமண விழாக்களை மிகவும் பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் சிலர் தங்களின் திருமணத்தை வெளிநாடுகளுக்கு சென்று நடத்தி வருகின்றனர். இப்படி இருக்க இது குறித்து பாரத பிரதமர் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அதாவது இந்திய மக்கள் வெளிநாடுகளில் தங்களின் திருமணங்களை நடத்தி கொள்வதை விட உள்நாட்டில் வைத்தால் அதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். மேலும் நம் நாட்டின் வருமானம் வெளிநாட்டுக்கு செல்வதை தடுக்க முடியும். இதோடு திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெங்கு காய்ச்சல்.., இத செஞ்சே ஆகணும்.., வெளியான அறிவிப்பு!!!