தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் காய்ச்சல், இருமல், போன்ற தொந்தரவுகளும் ஏற்படுகிறது. ஏன் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அம்மாவட்ட மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என தெரிவித்திருந்தார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. எனவே இனி வரும் நாட்களில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் பலரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஓயாத மணிப்பூர் விவகாரம்.., மீண்டும் இணைய சேவை துண்டிப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!