உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த 12ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டதால் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வரும் சுரங்கப் பாதையின் அடியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுமார் 60 மீட்டர் தொலைவுக்கு அடியில் சிக்கிய இவர்களை மீட்கும் பணி கடந்த 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், நேற்று (நவம்பர் 28) இப்பணிக்கு வெற்றி கிடைத்தது.
அதாவது, நேற்று முன் தினம் சுமார் 52 மீ வரை தோண்டப்பட்ட நிலையில், சுரங்கத்தின் மேல் பகுதியிலும் சுமார் 80 மீட்டர் தூரத்திற்கு செங்குத்தாக துளையிடும் பணியும் நடைபெற்று வந்தது. 12 எலி வளை தொழில்நுட்ப நிபுணர்கள் இப்பணியில் ஈடுபட்ட நிலையில், அவர்களின் பெரும் உதவியால் நேற்று இரவு (நவம்பர் 28) 8 மணி முதல் அடுத்த 45 நிமிடத்தில் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Enewz Tamil WhatsApp Channel
இனி வெளிநாட்டில் அது வேண்டாம்., இந்திய மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவுரை!!