50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த சீசனின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றனர். அதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்து முக்கிய தகவல் கசிந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நீங்களே தொடர வேண்டும் என ராகுல் டிராவிட்டிடம் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையுடன் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
17 நாட்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி…, 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு!!