டெல்லி விவசாயிகளின் போராட்டம் – மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா மற்றும் பிற மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆலோசனையில் மோடி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகளின் போரட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசுடனான 11 கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு விவசாயிகள் அதிதீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய விவசாயிகளின் இந்த போராட்டம் உலக தலைவர்கள் பார்வையின் பக்கம் திரும்பியுள்ளது. சமூகவலைதளங்களில் உலக பிரபலங்கள் பலரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களது குரலை கொடுத்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிமுக, அமமுக இணைப்பு 100% வாய்ப்பில்லை – ஜெயக்குமார் பேட்டி!!

போராடி வரும் விவசாயிகளுக்காக பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் தங்களது ஆதரவை கொடுத்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி விவசாயிகளின் போராட்டம் குறித்து இன்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். மோடியின் ஆலோசனையில் மத்திய உள்துறையை மந்திரி அமித்சா மற்றும் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்க் தோமர் ஆகியோர் பங்குபெற்றனர். உலக மக்களின் கவனம் ஈர்த்த போராட்டத்திற்கு பிரதமரின் இந்த ஆலோசனைக்கூட்டம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here