அன்னாசி பழத்தில் வெடி மருந்து – கர்ப்பிணி யானையை கொன்ற மனித மிருகங்கள்

1

கேரளாவில் பசிக்கு உணவு தேடி வந்த கர்ப்பிணி யானை ஒரு கும்பல் கொடுத்த அன்னாசி பழத்தை உண்ட பொழுது அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததில் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணி யானை:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பசியால் தவித்த யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. பசி தாங்காமல் தெருக்களில் சுற்றிய யானை அப்பகுதி மக்கள் கொடுத்த உணவை உண்டுள்ளது. அப்பொழுது சில மனித மிருகங்கள் அன்னாசி பழத்தில் வெடி மருந்தை கலந்து கொடுத்துள்ளனர். அதனை யானை உண்டபொழுது அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததில் யானையின் வாய் மற்றும் நாக்கில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வலியில் துடித்த யானை அங்கிருந்து ஓடி உள்ளது.

அவ்வளவு வலியிலும் யாரையும் தாக்காமல், கிராமத்தில் எவ்வித பொருட்களையும் சேதப்படுத்தாமல் யானை சென்றுள்ளது. பசி அதிகமாக இருந்தாலும் அதன் வாயில் ஏற்பட்ட காயத்தால் அதனால் எதையும் உண்ண முடியவில்லை. வலியால் துடித்த யானை அங்கிருந்த ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த கேரள வனத்துறையினர் இரண்டு யானைகள் மூலம் காயமுற்ற யானையை மீட்க முயற்சி செய்தனர்.

சில மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்ட அந்த யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த யானை கர்ப்பமாக இருந்ததும் கண்டறியப்பட்டு உள்ளது. இதனையடுத்து இரு உயிர்கள் இறக்க காரணமான அந்த மனித மிருகங்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

  1. அதே அன்னாட்சிபழவெடியைஅந்தமனிதமிருகங்களை உண்ணவைத்துக் கொல்லவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here