விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சண்டையும் சச்சரவுமாக போய்க் கொண்டுள்ளது. மேலும் இதில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்த பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் கிடைத்து வந்தது. மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வந்தது.ஆனால் எதிர்பாராத விதமாக பெண் போட்டியாளர்கள் தங்களுக்கு பிரதீபால் பாதுகாப்பு இல்லை என கூறியிருந்த காரணத்தால் கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் போஸ்ட் செய்திருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது எனக்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர்களை வெளியேற்ற எனக்கு இரண்டு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். மேலும் எனக்கு பிக் பாஸ் 7 ன் ஏழாவது வார கேப்டன் பதவியும் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுக்க நான் தயார் என்ற ஓபன் ஸ்டேட்மெண்ட்டை பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிரதீப்.
ஆண் உள்ளாடை காட்டினால் ஓகே வா.., மாயாவை ரிவிட் அடித்த அர்ச்சனா – பிக்பாஸ் காரசாரமான விவாதம்!!