தமிழக மக்களுக்கு அலர்ட்.,, நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.,, மின்வாரியம் அறிவிப்பு!!

0
தமிழக மக்களுக்கு அலர்ட்.,, நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.,, மின்வாரியம் அறிவிப்பு!!
தமிழக மக்களுக்கு அலர்ட்.,, நாளை இந்த பகுதிகளில் பவர் கட்.,, மின்வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில் நாளை (செப்.,28) இரண்டு மாவட்டங்களில், மின் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பவர் கட்:

தமிழகத்தில் மாதந்தோறும், அனைத்து மாவட்ட துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்.,28) தேனி மாவட்டம் வட புதுப்பட்டியிலும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி பகுதியிலும், மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில மணி நேரம் மின்தடை ஏற்படும் என அம்மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மின்தடை குறித்து தேனி உதவி மின் செயற்பொறியாளர் பி. ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாரப்பநாயக்கன்பட்டி, கொங்கபட்டி, சாமியாடிபுதூா்,மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூா், ஜ. வாடிப்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, நரசிங்காபுரம், அண்ணாநகர், இ. அய்யம்பாளையம், மாம்பாறை, ஜவ்வாதுபட்டி,
சோழியப்ப கவுண்டனூா், குளிப்பட்டி,ஜோகிப்பட்டி, நவக்கானி, புல்லாக்கவுண்டனூா், அத்தப்பன்பட்டி, இடையன்வலசு, எல்லப்பட்டி, பெருமாள் கவுண்டன் வலசு, , ஓடைப்பட்டி, பாறைப்பட்டி, இ. கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூா்,நாகப்பன் பட்டி, வலையபட்டி, கோமாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக TET தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ் – தாமதமாகும் பணி நியமனம்! இழுபறியில் ஆசிரியர்கள் நிலை!!

மேலும் மின்தடை குறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகலாதன் வெளியிட்ட அறிக்கையில், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செப். 28) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அரப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், வடபுதுப்பட்டி, சிட்கோ தொழிற்பேட்டை வளாகம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கர்னல், பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகம், பாரஸ்ட் சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here