இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான T20 தொடரில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து BCCI விளக்கமளித்துள்ளது.
சுப்மன் கில்
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், தற்போது நல்ல உடல் தகுதியுடன் இருந்தும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இதனால் ரசிகர்களிடம் இவர் ஏன் அணியில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சுப்மன் கில் நடிகைகளுடன் தேவையின்றி ஊர் சுற்றியதால் தான் இந்திய அணியில் இடம்பெறவில்லையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் இந்த சந்தேகம் அனைத்திற்கும் BCCI முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
எதிரணியை இப்படி பண்ணிட்டீங்களே கோலி.., போன வருட சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாக்.., முன்னாள் கேப்டன்!!
அதாவது சுப்மான் கில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். இதனால் தான் அவர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை என BCCI விளக்கமளித்துள்ளது. மேலும் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான T20 போட்டியிலே தனது திறமையை நிரூபித்து விட்டார் எனவும் BCCI நிர்வாகிகள் கூறியுள்ளனர்.