தன் அம்மாவை கொன்றது மகேஸ்வரி தான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் பூவரசி – விறுவிறுப்பான சம்பவங்களுடன் ‘பூவே உனக்காக’!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் தற்போது பூவரசிக்கு எல்லா உண்மைகளும் தெரியவர பூவரசியை கதிர் காப்பாற்றுவாரா?? அல்லது அவரின் நிலை என்னாகும் என பல திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியலில் மகேஸ்வரி பற்றிய உண்மை கதிருக்கு தெரிய வர இத்தனை நாட்கள் ஏமாந்ததை நினைத்து கதறுகிறார். மேலும் மகேஸ்வரியிடம் சென்று சண்டையிட கடைசியில் அவரது தம்பி வந்து காரியத்தை கெடுகிறார். எப்படியோ கதிரும் அவரது அம்மாவும் தப்பித்து விடுகின்றனர்.

ஆனால் கதிர் இந்த அளவிற்கு மனம் திருந்தியும் பூவரசி அவரை சுத்தமாக நம்பவும் இல்லை. அவரது அப்பாவும் கதிரை நம்ப தயாராக இல்லை. இப்படி போய்க்கொண்டிருக்க மகேஸ்வரியின் முகத்திரையை கிழித்தே ஆக வேண்டும் என்று பல ஆதாரங்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனாலும் பூவரசி வீட்டில் யாரும் நம்பவில்லை.

இப்படி இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மகேஸ்வரியின் தம்பி வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் வருகிறார். இதனை பார்க்கும் மஹேஸ்வரி அவரை தனியாக அழைத்து சென்று ஏதேதோ பேச அதனை பூவரசி கேட்டு விடுகிறார். அப்போ எங்க அம்மாவை கொன்றது நீங்க தானா?? என்று கதறுகிறார்.

உண்மை தெரிந்து விட்டதே என்று நடுங்குகிறார் மகேஸ்வரி. இவை அனைத்தையும் ப்ளூடூத் மூலம் கேட்டு கொண்டுள்ளார் கதிர். மகேஸ்வரி பூவரசியை கொல்ல சொல்லி கத்துகிறார். எப்படியும் பூவரசியை காப்பாற்ற வேண்டும் என்று ஓடி வருகிறார் கதிர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamடர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here