ஜீ தமிழ் சீரியல் மூலமாக பிரபலம் அடைந்து வந்த நடிகை ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒரு சீரியலில் நடிக்க இருக்கிறார். அந்த சீரியல் குறித்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகின்றது.
பூவே பூச்சூடவா
முதன் முதலாக டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் தான், நடிகை ரேஷ்மா. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு “பேஸ் ஆப் சென்னை” என்ற மாடலிங் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் 10 பெண்களில் தேர்வானவர் ஆவார். அதே போல் இவர் சிறந்த மாடலிங் நடிகை ஆவார். 2016 ஆம் ஆண்டு இவர் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசினை வென்றவர் ஆவார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி – முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற நிகழ்ச்சியில் நடிகர் ராகவ் உடன் ஆடினார். அதே போல் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “பூவே பூச்சூடவா” என்ற சீரியலில் நடிகையாக நடித்தார். அந்த சீரியலில் தன்னுடன் நடித்த மதன் பாண்டியன் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியான சூழலில் இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய மெகா தொடரான “அபி டையிலர்” என்ற சீரியலில் நடிக்க இருக்கிறார். இந்த தொடர் வரும் 24 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து தொகுப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் வேறு வேறு சேனல்களில் பணியாற்ற செல்கின்றனர். அந்த வகையில் ரேஷ்மாவும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சில் நடிக்க உள்ளார்.