‘சோழ குலத்தை வேரோடு அழிப்போம்’…..,வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரைலர்….,

0
'சோழ குலத்தை வேரோடு அழிப்போம்'.....,வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ட்ரைலர்....,
'சோழ குலத்தை வேரோடு அழிப்போம்'.....,வெளியானது 'பொன்னியின் செல்வன் 2' ட்ரைலர்....,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரது நடிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையின் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த விழாவில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ பகுதி 1 தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் ட்ரைலரில் அருள்மொழிவர்மன் நதியில் மூழ்கியதால் அடுத்த பட்டத்து இளவரசனாக மதுராந்தகன் அறிவிக்கப்படுகிறார்.

மறுபக்கத்தில், கொள்ளிடம் ஆற்றின் வடக்கில் இருக்கும் பகுதியை மதுராந்தகனுக்கும், தெற்கில் உள்ள பகுதியை ஆதித்த கரிகாலனுக்கும் பிரித்து கொடுத்து தனது சூழ்ச்சியை நிறைவேற்ற திட்டமிடுகிறார் பெரிய பழுவேட்டரையர்.

இதற்கிடையில், தஞ்சைக்கு வந்த ஆதித்த கரிகாலன் தம்பி அருள்மொழிவர்மனை இழந்த சோகத்தில் மீண்டும் போருக்கு தயாராகிறார். ஆனால், அருள்மொழிவர்மன் ஊமைஅரசியால் காப்பாற்றப்பட்டு இலங்கையில் பத்திரமாக இருக்கிறார்.

இந்த தகவலை அறிந்து கொள்ளும் குந்தவை அவரை பார்க்கச் செல்கிறார். மேலும், ஊமை அரசி நந்தினி என்பதை அருள்மொழி மூலம் தெரிந்து கொள்கிறார் குந்தவை. இதற்கிடையில், ஆதித்த கரிகாலரை கடம்பூரில் வைத்துக் கொள்ள சத்தி செய்கிறார் நந்தினி. இதற்காக நடக்கும் போர், ரத்த வெள்ளம், காதல் என அனைத்து கதைக்களத்துடனும் வெளியாகி இருக்கிறது ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் ட்ரைலர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here