தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மூலம் இயங்கும் பேருந்துகளில் 5 முறை பயணம் செய்பவர்களுக்கு 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கட்டண சலுகை
தமிழக அரசின் போக்குவரத்துத் துறை மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, பல தனியார் பேருந்து நிறுவனங்களும் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து பயணிகளுக்கு பேருந்து சேவைகளை வழங்கி வருகிறது. இதற்கிடையில், அரசுப் பேருந்துகளில் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் விதமாக போக்குவரத்துத் துறை முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
‘சோழ குலத்தை வேரோடு அழிப்போம்’…..,வெளியானது ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரைலர்….,
அதாவது, தமிழகத்தில் இயங்கி வரும் SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களுக்கு 6 ஆவது பயணத்தின் போது 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பேருந்து பயணிகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.