புதுச்சேரியில் உள்ள ஆஷா ஊழியர்களுக்கு ரூ.1000 வரை சம்பள உயர்வை அளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு
புதுச்சேரியில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை அரசாங்கம் வெளியிட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கீர்த்தி சுரேஷின் காதல் விவகாரம்.., மகளின் லவ் குறித்து பேசிய பெற்றோர்கள்- ரசிகர்கள் ஷாக்!!
அந்த வகையில், ஆஷா பணியாளர்களின் ஊதியத்தை ரூ.10,000 வரை உயர்த்துவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த ஆஷா ஊழியர்கள், மத்திய அரசாங்கத்தின் சுகாதார திட்டங்கள் மற்றும் அது குறித்த பலன்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தன்னார்வலர்கள் ஆவர். இவர்களுக்கான ஊதியத்தை ரூ.1000 வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது கவனத்திற்குரியது.