கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரியில் இளம்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிமுக பிரமுகர் உள்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தான் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதாக கடந்த 2019 ம் ஆண்டு பெப்ரவரி 24 ம் தேதி அளித்த புகாரின் பேரில் வசந்தகுமார், சதிஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சபரிராஜன் ஆகியோரை பிப்ரவரி 27 ம் தேதி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேலும் பல பெண்களை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அப்பெண்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வந்ததாக தகவல்கள் கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சித்ராவின் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் – காவல் ஆணையம் உத்தரவு!!
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையானது சிபிஐ க்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணையின் போது இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் இரண்டு பேருக்கு தொடர்பு இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்போது அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம்(34), அவரது நண்பர்கள் ஹெரான் பால்(29) மற்றும் பாபு(27) என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுவரும் குற்றவாளிகள் மூன்று பேரும் விரைவில் சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.