நாடு முழுவதும் சிற்பி, தையல், செருப்பு தைத்தல் உள்ளிட்ட 18 தொழில்களை பாரம்பரியமாக செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புபவர்களுக்கு, பயிற்சியுடன் தினந்தோறும் ரூ.500 நிதியுதவி வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிவடைந்த பிறகு வட்டியின்றி ரூ.1 லட்சம் வரையிலும், 5 சதவீத வட்டியுடன் ரூ.2 லட்சம் வரையிலும் கடனுதவியை பெறலாம். மேலும் தொழில் கருவிகள் வாங்குவதற்கு ரூ.15,000 நிதியுதவி வழங்கப்படும். பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் www.pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.