நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அனைத்து கட்சிகளும் பல வாக்குறுதிகளையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் பகுதியில் ஒரு பெண் வேட்பாளர் அறிவித்த தேர்தல் வாக்குறுதி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அகில இந்திய மனிதநேயக் கட்சி சார்பாக போட்டியிடும் வனிதா ராவத் தனது வெற்றியை உறுதி செய்ய தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிரசாரத்தின் போது, ரேஷன் கார்டுகளில் வெளிநாட்டு மதுபானம் வழங்குவதாகவும், வேலையில்லா இளைஞர்களுக்கு மதுபான ஒப்பந்தம் வழங்குவதாகவும் அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
பிரதமரின் விஸ்வகர்மா: தினந்தோறும் ரூ.500 உதவித்தொகை., வட்டியில்லா கடன்? மத்திய அரசின் திட்டம்!!!