இன்று மாலை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்ற இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல பிரச்சனைகள்:
நம் நாடு கடந்த சில மாதங்களாக பல பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகிறது. அது நோய் பரவல் மற்றும் எல்லை பிரச்னை. இவை ரெண்டும் நம்மை பெரிய அச்சத்திற்கு அழைத்து சென்று உள்ளது.
நோய் பரவல்:
ஒருபுறம் நோய் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து உலக நாடுகள் பட்டியலில் நாம் 2 ஆம் இடத்தில உள்ளோம். அரசுகள் இதற்கு தீவிரமாக போராடி வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்று பல விதங்களில் போராடி வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
எல்லை பிரச்னை:
மறுபுறம், கடந்த மாதம் நமக்கு பல அசம்பாவிதம் நடந்தது. நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் இழந்து உள்ளனர். சீன அரசு நெருக்கடியை கொடுத்து உள்ளது. நம் அண்டை நாடு என்று நினைத்த நாடு இப்படி செய்தது நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உரை:
இப்படியிருக்க, இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். அவர் இந்த பிரச்னை குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் நரேந்திர மோடி அவர்களின் அலுவலகம் ட்விட்டர் மூலம் தெரிவித்து உள்ளது.