அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களின் ஓய்வு கால நலன் கருதி அவர்களது மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை EPFO கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த தொகைக்கு ஏற்ப அரசு மாதம் தோறும் வட்டி வரவு வைத்து வருவது வழக்கம். இந்நிலையில் PF கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் PF பணத்தை வீட்டில் இருந்தே சுலபமாக எடுத்துக் கொள்ளலாம். அது எப்படி என்று பார்க்கலாம்.
- EPFO அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லாகின் செய்து பெயர் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும்.
- அதன் பிறகு உங்கள் அக்கவுண்டுக்கு செல்லும் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆன்லைன் உரிமை கோரலை தேர்ந்தெடுத்து பணத்தை எடுக்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பின் அதில் ஆதார், வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும். தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு submit கொடுக்க வேண்டும். பின் நிறுவனம் அனைத்தையும் சரி பார்த்த பின் உங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.