தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை – கவலையில் வாகன ஓட்டிகள்!!

0

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டது. தற்போது இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்:

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருவார்கள். இதனை கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்கா டாலரின் இந்திய மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதனை மாற்றி அமைப்பர். கடந்த 2 நாட்களாக பெட்ரோல் விலையில் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் வேதனை அடைந்தனர். தற்போது இன்றைய நிலவரப்படி மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG 2வது டெஸ்ட் – டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்! கில் ஏமாற்றம்!!

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.90.44 மற்றும் டீசல் லிட்டர் ரூ.83.52 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து தற்போது ரூ.90.70 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து தற்போது ரூ.83.86 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here