சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்கம் செயல்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற உத்தரவாதம் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் நம்மில் பலர் வேலை செய்து வருகிறோம். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தர அந்தஸ்து வழங்க வேண்டும் என 1981ம் ஆண்டு காலங்களிலே தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் தொடர்ந்து 480 நாட்கள் பணி புரியும் பட்சத்தில் பணி நிரந்தர அந்தஸ்து, மகப்பேறு விடுமுறை, சம்பளத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அந்நிறுவனம் வழங்க வேண்டும். மேலும் 20க்கும் குறைவான தொழிலாளர், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் போன்ற சில நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு., ஏப்.25 முதல் கோடை விடுமுறை ஸ்டார்ட்! கல்வித்துறை அறிவிப்பு!!
இச்சட்டம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சத்துக்கும் மேலானோர் பயனடைந்துள்ளனர். இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் பட்சத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு http://www.labour.tn.gov.in/grievances.php என்ற இணையதளத்தில் புகார் மனுவை தாக்கல் செய்யலாம்.