தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
தெலுங்கானா மாநிலத்தில், சமீப காலமாக வெயில் கொளுத்தி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மார்ச் 2வது வாரத்தில் இருந்து, பள்ளிகளை அரை நாள் மட்டுமே இயக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 3 முதல் 13ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது அதிகரித்து வரும் வெயிலை கருத்தில் கொண்டு, சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுபோக, வருகிற மார்ச் 25ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகையில் பின்தங்கும் சீனா.., மாணவர்களிடம் விந்தணுவை தானம் செய்ய அழைக்கும் விந்தணு வங்கி!!
இந்த விடுமுறை முடிந்து, வருகிற ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கால சூழ்நிலையை பொறுத்து இதில் மாற்றங்கள் நிகழலாம் எனவும் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசின் உத்தரவை கேட்ட பள்ளி மாணவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.