கொரோனா ஒமிக்ரான் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் நோய்களால் சீன நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நோய்களால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமாகி வருகிறது. எனவே மக்கள் தொகை வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால் மக்கள் தொகை வளர்ச்சியை பெருக்க திருமணம் ஆகாவிட்டாலும் குழந்தை பெறலாம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும் கல்லூரி மாணவர்களின் விந்தணு தானத்துக்கு பணம் என்ற அறிவிப்பை சீன விந்தணு வங்கி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளை சர்வதேச அளவில் தரம் உயர்த்த திட்டம்., மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!
இதில் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டம் பெற்றவர் உயரம் 165 செமீ இருக்க வேண்டும் என சில விதிமுறைகளை வகுத்துள்ளனர். மேலும் இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் 8 முதல் 12 முறை விந்தணு தானம் செய்யலாம் என்றும் ஒருமுறைக்கு 664 டாலர்கள் வீதம் பணம் கொடுக்கப்படும் என்றும் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.