அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட அதிக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அதில் “சிட்டிஸ்” திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 28 அரசு பள்ளிகளை சர்வதேச அளவில் தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்மூலம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், உட்கட்டமைப்பு, WiFi வசதி, ஹைடெக் ஆய்வகம், விளையாட்டு திடல், மாநிலங்களின் சிறப்பு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு விதமான நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு பணிக்கு எந்தவித தடையும் இல்லை., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
தற்போது இப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளதால் அடுத்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை பல மடங்கு அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்துக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.