பார்டர்-கவாஸ்கர் டிராபி: 2வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?? பிசிசிஐ முடிவு தான் என்ன??

0
பார்டர்-கவாஸ்கர் டிராபி: 2வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?? பிசிசிஐ முடிவு தான் என்ன??
பார்டர்-கவாஸ்கர் டிராபி: 2வது டெஸ்டில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா?? பிசிசிஐ முடிவு தான் என்ன??

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கு பெறுவது கேள்வி குறியாகி உள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் கடந்த 9ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த, முதல் போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில், முன்னணி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்றிருந்தார். ஆனால், முதுகு வலி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விலகுவதாக அறிவித்தார். இதனால், சில நாட்களாக ஓய்வில் இருந்த இவர், சமீபத்தில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்ததாக தகவல் வெளியானது.

2 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த எதிரணி…, பிரபல லிவர்பூல் அணி டாப் 10 ல் நுழைந்து அசத்தல்!!

இதன் மூலம், டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான உடல் தகுதி தேர்வில் இவர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியானது. ஆனாலும், ஜடேஜாவை போல, ஸ்ரேயாஸ் ஐயரும் உள்ளூர் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் விளையாடினால் தான், சர்வதேச இந்திய அணிக்கு திரும்ப முடியும் என கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், இவர், டெல்லியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பங்குபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here