எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கும் இடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் முக்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆசிய கோப்பை:
இந்தியாவில் ஐபிஎல் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் ஐசிசி சார்பாக வரும் அக்டோபர் மாதம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற உள்ளது. இதற்கு ஆசிய அளவிலான அணிகள் தயாராகும் வகையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரை ஒருநாள் போட்டிகள் வடிவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், இந்த ஆசிய கோப்பை நடைபெற இருக்கும் இடம் தான் இன்றளவிலும் குழப்பமாக உள்ளது. அதாவது, எதிர்வரும் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பிசிசிஐ, ஆசிய கோப்பைக்காக இந்திய அணி சில காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு வராது. இதனால், பொதுவான ஓர் இடத்தில் தான் ஆசிய கோப்பையை நடத்தப்பட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
இதற்கு, சில நாடுகள் ஆதரவு அளித்த போதும், பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும், ஒரு கட்டத்திற்கு மேல், 2023 ஆசிய கோப்பையை நடத்துவதற்கு இங்கிலாந்து சாத்தியமான இடமாக இருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரே உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஆசிய கோப்பை தொடர், இங்கிலாந்தில் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.