அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கோரும் பட்சத்தில் அவர்களுக்கு “பொது மாறுதல் கலந்தாய்வு” கூட்டத்தை கல்வித்துறை அறிவித்துள்ளது. இக்கூட்டம் மே 8 முதல் 31ம் தேதி வரை நடைபெற இருப்பதாக அண்மையில் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் பொது மாறுதல் கலந்தாய்வு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு மே 15 முதல் 24ம் தேதி வரையிலும், பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மே 15 முதல் 26ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களே., உடனே இத முடிச்சிடுங்க?? இல்லனா சலுகைகள் கிடைக்காது!!!
கூடுதல் விவரங்களுக்கு 14417 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பான அறிக்கையை அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.