இமைக்கா நொடிகள் வில்லன் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு – பாலிவுட்டில் பரபரப்பு!!

0
anurag-kashyap
anurag-kashyap

இந்திய திரையுலகில் போதைப்பொருள் உட்பட பல பிரச்சனைகள் தலையெடுத்துள்ள நிலையில் தற்போது ட்விட்டரில் ஹிந்தி நடிகையான பாயல் கோஷ், பிரபல ஹிந்தி பட இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் குற்றசாட்டு:

ஹிந்தி நடிகரான சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு மராட்டிய அரசுக்கு எதிராக பல கருத்துக்களை கங்கனா அவர்கள் வெளியிட்டு பல சர்ச்சைகள் நடந்து வந்தன. இந்த பிரச்சனையால் அவருக்கு ஒய்+ பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஹிந்தி திரைப்பட இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

anurag
anurag

ஹிந்தியில் தேவ் டி, கேங்ஸ் ஆப் வசிப்பூர், பாம்பே டாக்கீஸ், பாம்பே வெல்வெட் போன்ற படங்களை இயக்கியவர் தான் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். பிரபல இயக்குனரான இவர் மீது ஹிந்தி நடிகை பாயல் கோஷ் ட்விட்டரில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது, “என்னிடம் அனுராக் காஷ்யப் அத்துமீறி நடந்து கொண்டார். எனவே பிரதமர் மோடி அவர்களே இந்த பிரபல மனிதருக்கு பின்னால் இருக்கும் இந்த தீய குணத்தை அனைவர்க்கும் பார்க்கும் படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் எனது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் எனவே தயவு செஞ்சு உதவுங்கள்.” என பிரதமரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

anurag-kashyap
anurag-kashyap

இதனை மறுத்துள்ள அனுராக் காஷ்யப் கூறியதாவது, “என் மீது சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனது வாயை அடைப்பதற்கான நீண்டகால சூழ்ச்சி இது. இதில் என்னை அமைதியாக்க சில பாலிவுட் குடும்பத்தையும் இந்த பிரச்சனையில் உள்ளிழுத்துளீர்கள். வரம்புடன் நடந்துகொள்ளுங்கள்.” என கூறியுள்ளார். மேலும் அனுராக் காஷ்யாப்பிற்கு எதிராகவும், சிலர் ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here