நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளுக்கு பேனர் அடித்து கொண்டாடுவதற்காக சென்ற இளைஞர்கள் மூவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிழந்துள்ளனர்.
பேனர் ஒட்டபோன ரசிகர்கள்:
நடிகர் மற்றும் ஜன கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவரது ரசிகர்கள் இதனால் நேற்றிலிருந்து அவருக்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர்கள் வைப்பதிலும் மும்மரமாக இருந்து வந்தனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் என்ற கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் பவன் கல்யாண் பிறந்தநாளுக்கு பேனர் வைக்க முடிவு செய்துள்ளனர். தங்கள் பகுதியில் உள்ள இடத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர். இரும்பு சட்டத்தில் தாங்கள் வாங்கி வந்த பேனரை கட்ட ஏறி உள்ளனர்.
ஷிவானிக்கு கொக்கிபோடும் காக்காமுட்டை நடிகர்!!!
ஆனால், அந்த இரும்பு சட்டம் அருகே இருந்த மின்சார கம்பியுடன் உரசியது போல் இருந்துள்ளது. இதனை கவனிக்காத இவர்கள் பேனரை கட்ட ஏறியுள்ளனர். இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மூன்று பேர் மரணமடைந்துள்ளார். மேலும் மூவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பவன் கல்யாண் வருத்தம்:
— Boney Kapoor (@BoneyKapoor) September 2, 2020
இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட நடிகர் பவன் கல்யாண் இறந்தவர்களுக்காக தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார். நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்கும் போனி கபூர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கி உள்ளார்.