பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக பலி கொடுத்த தாய், தந்தை – ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0

மூடநம்பிக்கை காரணமாக தாங்கள் பெற்ற இரண்டு பிள்ளைகளை பெற்றோர்களே பலி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. படித்த பெற்றோர்களே இத்தகைய மூடநம்பிக்கையில் ஈடுபட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இரண்டு பெண்கள் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மதனப்பள்ளியில் வசித்துவரும் புருசோத்தம் நாயுடு கல்லூரி விரிவுரையாளர். இவரது மனைவி பத்மஜா தனியார் பள்ளியின் தாளாளர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அலேக்கா (27) போபாலில் மேற்படிப்பு படித்துவருகிறார். சாய் அலேக்கா (22) ஏ. ஆர் ரஹ்மான் இசைக்கல்லூரியில் இசை பயின்றுவருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடவுள் மீது அதீத பக்தி கொண்ட இப்பெற்றோர் அவர்கள் வசித்து வரும் சிவா நகரில் உள்ள வீட்டில் அடிக்கடி பூஜைகள் செய்வது வழக்கம். அதே போல சம்பவத்தன்று காலை பெற்றோர் அந்த இரு பிள்ளைகளையும் அழைத்து பூஜைக்கான விவரத்தை குறித்து கூறியுள்ளார்கள். ஞாயிற்று கிழமை காலை அந்த வீட்டை சுற்றிவர சொல்லியிருக்கிறார்கள். பின்பு அவர்களுக்கு பூஜைக்கான உடை அணிந்துவர சொல்லி அவர்கள் வரைந்து வைத்த சக்கரத்தில் உட்காரும்படி கூறியுள்ளார்கள்.

சசிகலா ஜன.27 இல் விடுதலை செய்யப்படுவாரா??சிறை நிர்வாகம் தகவல்!!

விவரம் அறியாத அந்த பிள்ளைகளும் அமர்ந்திருந்தபோது இளையமகளை சூலாயுததால் குத்தியுள்ளனர். பின்னர் பெரிய மகளின் வாயில் செம்பை வைத்து அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அந்த பிள்ளைகள் துடிதுடித்து இறந்ததும் புருசோத்தம் தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வர சொல்லியிருக்கிறார். அவருடைய நண்பர்கள் வந்த போது அவர்களிடம் தன் மனைவி இரண்டு பிள்ளைகளையும் அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். கொலை செய்த தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான அந்த பெற்றோர் திங்கள் கிழமை காலை சத்யயுகம் பிறக்கப்போகிறது என்றும் அப்போது தங்கள் இரு பெண்களும் உயிரோடு எழுந்திருப்பார்கள் என்றும் அதுவரை காலஅவகாசம் தரும்படி கெஞ்சியுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து டி.எஸ்.பி ரவி மனோஹராசாரி கூறியிருப்பதாவது, ‘கைதான இருவரும் அதிகம் படித்தவர்கள். மந்திரத்தின் மேல் அதீத நம்பிக்கை கொண்ட அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இறந்த இருவரும் மீண்டும் வருவார்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் இருவரையும் தகுந்த பாதுகாவலின் கீழ் வைத்துள்ளோம். கொலை நடந்த போது தந்தை புருசோத்தம் கூட இருந்துள்ளார் என முதல்கட்ட தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதி தகவல்கள் இதற்கு பின் விசாரணையில் தெரியவரும்’ என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here