கொரோனா பரவல் அனைவரையும் தாக்கும் நிலையில் தற்போது நம் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீசெல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு உறுதியாகி உள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அனைவரையும் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள், எம்.எல்.ஏ போன்றோர் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.அதில் சமீபத்தில் தான் தி.மு.க கட்சியை சேர்ந்த அன்பழன் மரணம் அடைந்தார்.
கூடுதலாக தி.மு.க கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும்,அ. தி.மு.க கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
அந்த விதத்தில் துணை முதல்வர் பன்னீசெல்வத்தின் சகோதரர் ஓ. ராஜாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
உறுதி செய்யப்பட்டது:
அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால் மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
கார் ஓட்டுநர் மூலமாக பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க பட்டு உள்ளது. அவர் தன்னை தனிமை படுத்தி கொள்ள தெரிகிறது.