Tuesday, April 30, 2024

தண்ணீர்க்காக வந்த குரங்கினை கொன்ற மனித மிருகங்கள் – மீண்டும் தோற்ற மனிதநேயம்.!

Must Read

தண்ணீர் குடிக்க வந்த குரங்கினை அடித்து கொடுமைப்படுத்தி தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தவறி விழுந்த குரங்கு:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்பம் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரராவ் வீட்டிற்கு வனப்பகுதியை சேர்ந்த குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க வந்துள்ளது. தண்ணீர் குடிக்க தண்ணீர் தொட்டியில் இறங்கி உள்ளது. ஆனால், இறங்கிய பொது தவறி விழுந்து உள்ளது.

monkey drinking water
monkey drinking water

இதனை கண்ட வெங்கடேஷ்வரராவ் அதனை காப்பாற்றாமல் அதனை அடித்து துன்புறுத்தி உள்ளார், அதோடு மட்டும் அல்லாமல் அதனை தூக்கில் மாட்டி தொங்க விட்டு உள்ளார். அங்கிருந்த நாய்களும் அந்த குரங்கினை கடித்து குதறி உள்ளன. இதனால், அங்கு இருந்த மற்ற குரங்குகள் இந்த குரங்கினை காப்பாற்ற வந்து உள்ளது.

மனித வடிவில் மிருகங்கள்:

அந்த குரங்கினை நாய்கள் கடிக்காமல் பாதுகாக்க உதவி செய்து உள்ளது. இதனை கண்ட வெங்கடேஷ்வரராவ் மற்றும் அவரது நண்பர்கள் மற்ற குரங்குகளின் இருந்து இன்னொரு குரங்கினையும் பிடித்து தொங்க விட்டு உள்ளனர்.

 monkey was hanged
monkey was hanged

இதனால், 2 குரங்குகள் பரிதாபமாக இறந்து உள்ளது. இவர்கள் இதோடு நிறுத்தாமல், இறந்த குரங்கின் உடல்களை நாய்களுக்கு வீசி எரிந்து உள்ளனர்.

வைரல் ஆன வீடியோ:

people who tortured
people who tortured

இந்த கொடூர சம்பவத்தை சில இளைஞர்கள் விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்து உள்ளனர். இதனை கண்ட வனத்துறை அதிகாரிகள் வெங்கடேஷ்வரராவ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

போலீசார் வழக்கு பதிவு:

இதற்கு அவர்கள் இப்படி ஒரு குரங்கினை செய்தால் மற்ற குரங்குகள் வராது என்று பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதை கேட்டு செய்ததாக கூறினார். ஆனால், அவர் சொன்னது போல் அல்லாமல் குரங்குகள் துன்பத்துக்கு உள்ளான குரங்கை காப்பாற்ற தான் வந்தன.

such a cruel activity of humans
such a cruel activity of humans

இந்த சம்பவத்தால் மனிதநேயம் மீண்டும் ஒரு முறை தோற்று உள்ளது. மனிதர்களிடம் மட்டும் காட்டுவது மனிதநேயம் அல்ல, அனைத்து உயிர்களிடமும் காட்டுவது தான். இவர்களை போன்றோர் எப்போது தான் திருந்த போகின்றனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

பொதுத்தேர்வு மாணவர்களே.., திட்டமிட்டபடி இந்த தேதியில் முடிவுகள் வெளியாகும்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26ம் தேதி என அரசு அறிவித்து இருந்தது. இதனால் பிளஸ் 2, பிளஸ்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -