பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் பாக்கியா லட்சுமி சீரியலும் மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இன்றைய எபிசோடில் இடத்தை விற்பதற்காக ராதிகாவை வற்புறுத்தி ஜனார்தனனிடம் அழைத்து செல்கிறார். ராதிகாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொள்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ராதிகா நேற்று மூர்த்தியை பார்த்து விட்டு வருகிறார். கோபியிடம் நடந்த விஷயத்தை பற்றி சொல்ல அந்த டீல் நமக்கு வேண்டாம். ஜனார்தனனை போய் பாப்போம் என்று சொல்லுகிறார்.
ராதிகா கொஞ்ச நேரம் யோசிக்க பிறகு ஒத்துக்கொள்கிறார். கோபி ஜனார்தனனிடம் ராதிகாவை அழைத்து செல்கிறார். இது தான் சாக்கு என இருக்கும் ஜனார்த்தனன் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறார். ராதிகாவிடம் அவர்களிடம் கொஞ்சம் கூட பணம் இல்லையென்றும், அவர்களால் அதனை தர முடியாது என்றும் சொல்லுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
2 வருடம் ஆனாலும் அவர்களால் அவ்வளவு பணத்தை ரெடி பண்ண முடியாது. ஒரு சின்ன கடையை வச்சுக்கிட்டு அத்தனை பெரு வாழறாங்க என்று சொல்ல ராதிகா ஒத்துக்கொள்கிறார். கோபியும் ரெஜிஸ்டரேசனுக்கு தேவையான வேலையை பார்க்கலாம் என்று கிளம்புகிறார்.
ராதிகா மூர்த்தியிடம் நடந்தவற்றை சொல்லலாம் என்று கேட்க அதற்கு கோபி அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லுகிறார். இது ராதிகாவுக்கு தப்பாகவே படுகிறது. அதன் பின் பாக்கிய பால் குடம் எடுத்து விட்டு கோவிலில் ஒரு இடத்தில் அமர்ந்து ஜீவா முல்லை, கதிர் மீனா அனைவரும் பேசிகொண்டுள்ளனர்.
அப்பொழுது வரும் கோபி எதற்கு என்ன தேவையில்லாமல் கூப்பிட்ட, அதன் நீயே பாத்துக்கோனு சொன்னேன் என்று என்று எரிச்சலடைகிறார். அதன் பின் அங்கிருந்து சென்று விடுகிறார். இதனை அனைவரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். அடுத்ததாக வீட்டிற்கு வர முல்லையின் அப்பாவும், கோபியின் அப்பாவும் ஒரே கதாபாத்திரம் என்பதால் அவரை உள்ளே அழைக்கின்றனர்.
அவரை பார்த்த கோபி இனியா அனைவரும் ஷாக் ஆகின்றனர். இனியா அவருடன் போட்டோ எடுத்துக்கொள்கின்றார். அடுத்ததாக பாக்கியா இதனை எழிலுக்கு கால் செய்து சொல்கிறார். எழில் தான் அந்த ஊருக்கு வந்து அழைத்து செல்வதாக சொல்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் – பிரதமர் மோடி உரை!!
அடுத்து ஜீவாவும், மூர்த்தியும் ரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க அப்பொழுது ராதிகாவும், கோபியும் சிரித்து பேசி சென்றுகொண்டுள்ளனர். அதனை மூர்த்தி பார்த்து விடுகிறார். வீட்டிற்கு செல்லும் மூர்த்தி பாக்கியாவிற்கு ஸ்வீட் வாங்கி வருகிறார்.
அடுத்ததாக பாக்கியா வீட்டை விட்டு செல்வதை நினைத்து கண்கலங்குகிறார். அதன் பிறகு தனத்திடம் நடந்ததை மூர்த்தி சொல்ல அதிர்ச்சியடைகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.