ராதிகாவுடன் கோபியை பார்த்து விடும் மூர்த்தி – பாக்கியாவிடம் உண்மையை சொல்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் சிக்குவாரா?? மாட்டாரா?? என்பதே ட்விஸ்ட்டாக உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இதுவரையிலும் நடத்தி வந்த கடையை விற்க வரும் ராதிகாவிடம் கால அவகாசம் கேட்க முடிவெடுத்துள்ளார் மூர்த்தி. ஹோட்டலில் ராதிகா கிளம்பி கீழே வர கோபி மெய்மறந்து பார்க்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நீயும் நானும் மட்டும் இருந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும் என்று சொல்ல அதற்கு ராதிகா உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கு. நான் மட்டும் தான் விவாகரத்து வாங்க போறேன் நீங்க கிடையாது என்று சொல்ல அதற்கும் கோபி உன்னை என்னால விட முடியாது என்று சொல்லுகிறார். அங்கிருந்து கிளம்புகின்றனர்.

மேலும் ராதிகாவுடன் வரும் கோபி மூர்த்தியை பார்த்ததும் காருக்குள்ளேயே இருந்து விடுகிறார். தனக்கு முக்கியமான ஜூம் மீட்டிங் இருப்பதாக சொல்லி ராதிகாவை மட்டும் அனுப்பி வைக்கிறார் கோபி. இது ராதிகாவுக்கு சந்தேகத்தை எழுப்புகிறது. எதோ தப்பாக தோன்றுகிறது.

குளிர்சாதன வசதியுடன் பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அனுமதி!!

ராதிகா மூர்த்தியிடம் போய் பேச 3 மாதங்களுக்கு பிறகு பணம் தருவதாக சொல்ல ராதிகா தான் வீடு வாங்க வேண்டும் அவரசரமாக பணம் தேவை படுகிறது என்று சொல்லுகிறார். மூர்த்தி பரிந்து கேட்க ராதிகாவும் ஒத்துக்கொள்கிறார். அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை காட்டுகின்றனர்.

அங்கு அனைவரும் குடும்பத்தோடு கோவிலுக்கு செல்ல தயாராகிக்கொண்டுள்ளனர். மூர்த்தி கோபி எங்கே என்று கேட்க அவருக்கு வேலை இருப்பதாக சொல்லுகின்றனர். அதன் பிறகு பாக்கியா அவருக்கு கால் செய்ய கோபி எடுக்கவே இல்லை. அடுத்து மூர்த்தி கால் செய்ய எடுத்து பேசுகிறார்.

தான் கோவிலுக்கு வரவில்லை என்று சொல்லி போனை கட் செய்கிறார். அடுத்து ராதிகாவை காரில் ஏற்றி செல்லும் கோபி ராதிகாவின் முகமாற்றத்தை பார்த்து ஏன் என்று கேட்கிறார். ராதிகாவும் நீங்கள் எதோ என்கிட்ட இருந்து மறைக்கிறீங்க. எதோ பதட்டமாக இருக்கீங்க என்று சொல்கிறார்.

எப்படியோ சமாளிக்கும் கோபி இடம் விஷயத்தை பற்றி கேட்க நடந்தவற்றை சொல்லுகிறார். கோபி இதனை ஒத்துக்கொள்ள வேண்டாம் என்று சொல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here