தற்பொழுது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், இன்று குடும்பத்தினருக்கு ரதியின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. ரதியிற்கு ஏற்கனவே திருமணம் நடந்தது முடிந்தது அனைவர்க்கும் தெரிய வர, கதிரிடம் முல்லை சரமாரியாக கேள்வி கேட்க தொடங்குகிறார். இதனால் சீரியல் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடர் கூட்டு குடும்பத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது. கதிரின் நண்பனுக்கு ரகசியமாக காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதைப்பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் நண்பனின் தங்கை என்று ரதியை தனது வீட்டில் தங்கவைத்தார் கதிர். இத்தனை நாட்களாக ரதியிற்கு திருமணம் முடிந்த விஷயம் கதிரை தவிர்த்து யாருக்கும் தெரியாமல் இருந்தது. இன்று அந்த உண்மை அனைவர்க்கும் தெரிய வருகிறது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரதியிடம் குறுக்கு கேள்வி கேட்க ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில் ரதி அதை சமாளிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு வெளியே செல்கிறார். பிறகு ஜீவா தனது குழந்தைக்கு பெயர் வைப்பதை பற்றி பேசத் தொடங்க, அப்பாவுடைய பெயரை சேர்த்து வைக்க வேண்டும் என்று ஜீவாவின் அம்மா சொல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முல்லைக்கு ரதியை பற்றிய சந்தேகம் தீரவில்லை. கதிர் வந்ததும் ரதியை பற்றி குறுக்கு கேள்வி கேட்க தொடங்குகிறார். முல்லைக்கு கதிர் தன்னிடம் ஏதும் பொய் சொல்கிறாரா?? என சந்தேகம் எழுந்ததால் கதைக்களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே தனத்திற்கு குழந்தை இல்லாத காரணம் தெரிந்து பெரிய பிரச்சனை வெடித்து, தற்போது தான் அது சரியானது. தற்போது கதிர், முல்லைக்கு இடையில் விரிசல் வந்து விடுமோ என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.