தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. மேலும் இந்த சீரியலை கதிர், முல்லைக்காக பார்ப்பவர்களே அதிகம். அவர்களுக்கு ரொமான்ஸ் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இன்றைய எபிசோடில் அந்த சீன் வரவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் எப்படியும் கதிர், முல்லைக்கு ரொமான்ஸ் வந்துவிடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமே. மேலும் அவர்களுக்கு தெரியாமல் தனம், மூர்த்தி மற்றும் ஜீவா எல்லாரும் முதலிரவிற்கு ஏற்பாடுகளும் செய்தனர். இந்நிலையில் இரவில் கதிரும், முல்லையும் தூங்க போக அவர்களை தனியாக படுக்க வைத்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இருவரும் பிரிய மனமின்றி எதுவும் புரியாமல் தனியாக சென்றனர். ஜீவா அவர்களுக்கு தெரியாமல் எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தார். இன்றைய எபிசோடில் கதிரை கடையிலிருந்து வேகமாக வீட்டிற்கு அழைத்து எதுவும் சொல்லாமல் கிளம்ப வைக்கின்றனர். எங்கே என்று கேட்டதற்கு கோவிலுக்கு என்று பொய் சொல்லி கிளம்ப வைக்கின்றனர்.
இந்த பக்கம் தனம் முல்லையை கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று வேகமாக கிளம்ப சொல்கிறார். முல்லையும் என்ன என்று புரியாமல் கிளம்பிக்கொண்டுள்ளார். மேலும் தனம் முல்லையை சாப்பிட வைக்க அவருக்கு ஏதோ சந்தேகமும் எழுகிறது. அதன் பின் ஜீவா கதிரை ரூமிற்குள் அனுப்பி வைக்க அப்பொழுது தான் கதிருக்கு புரிகிறது.
அதே சமயம் முல்லையும் ரூமிற்கு வர அலங்காரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து வெட்கப்படுகிறார். மேலும் கதிரை பார்த்து கண்ணை மூடிக்கொள்கிறார். கதிர் மெதுவாக கிட்ட வர அவரை பார்த்து வெட்கப்படுகிறார். திடீரென இடி, மின்னல் அடிக்க முல்லை பயந்து எழுகிறார். மேலும் இடி பயங்கரமாக இடிக்க பக்கத்தில் இருக்கும் கதிரை கட்டிக்கொள்கிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
சரி, இனிமேல் ரொமான்ஸ் சீன் தான் என்று ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கதிர் முல்லையை விலக்கி கடையில் அரிசியை அப்படியே வைத்து விட்டேன். மழை வேற வருது, நனைஞ்சுடும் என்று சொல்லி கிளம்புகிறார். முல்லை எவ்வளவு கூப்பிட்டும் கதிர் கேட்பதாக இல்லை. இதோடு எபிசோடும் முடிவடைகிறது.